உள்ளூர் செய்திகள்

ஏரியில் மண் திருட்டு நடந்து உள்ளதை படத்தில் காணலாம்.

திண்டிவனம் ஏரிகளில் அனுமதி இன்றி வண்டல் மண் திருட்டு

Published On 2022-08-19 07:44 GMT   |   Update On 2022-08-19 07:44 GMT
  • பல்வேறு ஏரிகளில், உரிய அனுமதியுடன் அதிக அளவில் வண்டல் மண் எடுக்கப்படுகிறது.
  • பொதுமக்கள் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுப்ப ணித்துறை, உள்ளாட்சி த்துறை கட்டுப்பாட்டில் ஏரிகள் உள்ளன. பல்வேறு ஏரிகளில், உரிய அனுமதியுடன் அதிக அளவில் வண்டல் மண் எடுக்கப்படுகிறது.ஆனால் திண்டிவனம் அய்யன் தோப்பு அருகே உள்ள தாங்கல் ஏரியில் வண்டல் மணல் அள்ளுவது தொடர்கதையாக உள்ளது. பொக்லைன் மூலம், இரவில் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு உத்தரவை மீறி, நாளுக்கு நாள் மண் திருட்டு, அதிகரித்து வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து திண்டிவனம் தாசில்தார் வசந்த கிருஷ்ணனிடம் கூறுகையில் தாங்கல் ஏரியில் மணல் அல்லுவது பற்றி புகார் வந்துள்ளது. உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் .மேலும் அனுமதி இன்றி மணல் அள்ளுவதைப் பற்றி புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

Tags:    

Similar News