உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2023-09-27 15:33 IST   |   Update On 2023-09-27 15:33:00 IST
  • கிருஷ்ணகிரி அருகே விஷம் குடித்து வாலிபர் உட்பட 2 பேர் பலியானார்கள்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி அருகே யுள்ள பாகலூர் செவகனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சேரன் (வயது22). இவர் தனியார் பேட்டரி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். சில மாதங்க ளாக இவருக்கு குடிப்ப ழக்கம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் இவரை இவரது பெற்றொர்கள் குடிக்க வேண்டாம் என்று கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த சேரன் சம்பவத்தன்று விஷம் குடித்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை க்கு அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல் ராயக்கோட்டை கோணம் பட்டியை சேர்ந்த விவசாயி ஒருவர் அந்த பகுதியில் அரை ஏக்கர் புறப்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளார். அது குறித்த புகாரின் பேரில் அந்த நிலத்தை வருவாய்த்துறை அதிகா ரிகள் அளந்து வேலி போட்டுள்ளனர். இதில் மனம் உடைந்த விவசாயி சம்பவத்தன்று விஷம் குடித்தார்.

அவரை மீட்டு உறவி னர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றிரவு இறந்தார். இது குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Similar News