உள்ளூர் செய்திகள்

பிளஸ்-1 மாணவி உள்பட 2 பேர் மாயம்

Published On 2023-08-18 08:42 GMT   |   Update On 2023-08-18 08:42 GMT
  • பதறிப்போன சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடிபார்த்தனர்.
  • எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே மிட்டாஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடிபார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தாயார் சிங்காரப் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். மாயமான சிறுமியை தேடிவருகின்றனர்.

இதேபோன்று மகனூர் பட்டியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தாயார் அளித்த புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News