உள்ளூர் செய்திகள்

இரண்டு நாட்கள் டாஸ்மாக் விடுமுறை

Published On 2022-09-30 16:09 IST   |   Update On 2022-09-30 16:09:00 IST
  • வருகிற அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி மற்றும் அக்டோபர் 9-ந்தேதி மிலாடி நபி.
  • விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்படமாட்டாது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

வருகிற அக்டோபர் 2-ந்தேதி காந்திஜெயந்தி தினம் மற்றும் அக்டோபர் 9-ந்தேதி மிலாடிநபி தினம் ஆகிய 2 நாட்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகள் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News