உள்ளூர் செய்திகள்

குருபரப்பள்ளி அருகே விவசாய தோட்டத்தில் இருந்த மின்வயர்களை திருடிய 2 பேர் கைது

Published On 2023-09-17 15:58 IST   |   Update On 2023-09-17 15:58:00 IST
  • 60 மீட்டர் வயரை மர்ம நபர்கள் 2 பேர் திருடி சென்றனர்.
  • போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி ராகிமான பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது40). விவசாயியான இவரது தோட்டத்தில் மின் மோட்டாருக்கு பொருத்தக் கூடிய 60 மீட்டர் வயரை மர்ம நபர்கள் 2 பேர் திருடி சென்றனர்.

அப்போது அங்கு வந்த முருகன் அந்த மர்ம நபர்களை மடக்கி பிடித்து குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்ததில், பாம்புகாரன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த பழனிமுத்து (24), குருப–ரப்பள்ளியைச் சேர்ந்த ராஜ்குமார் (22) ஆகிய 2 பேர் மின்வயரை திருடியது தெரியவந்தது.

உடனே போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Tags:    

Similar News