உள்ளூர் செய்திகள்

அனுமதியின்றி பேனர் வைத்த 2 பேர் கைது

Published On 2023-07-17 09:33 GMT   |   Update On 2023-07-17 09:33 GMT
  • பொதுமக்களுக்கு இடையூறாக சிலர் அனுமதி யின்றி பேனர் வைத்திருப்பது தெரிய வந்தது.
  • அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீசார் காமராஜ் நகர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக சிலர் அனுமதியின்றி பேனர் வைத்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், சின்ன எலத்தகிரியை சேர்ந்த பிரேம்குமார் (வயது29), முரளி (24) ஆகிய 2பேர் பேனர் வைத்தது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News