உள்ளூர் செய்திகள்

அடையாளம் தெரியாத உடல்

Published On 2022-09-21 14:40 IST   |   Update On 2022-09-21 14:40:00 IST
  • அடையாளம் தெரியாத உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • ஹோலிகிராஸ் பழைய குட்செட் ரோடு அருகில் இறந்து கிடந்தார்

திருச்சி:

திருச்சி மாநகரம் கோட்டை காவல் நிலைய எல்லை பகுதியான தேவதானம் சிந்தாமணி கிராம நிர்வாக அலுவலர் கிரஷ்ணபிரியா, கடந்த 19-ந்தேதி திருச்சி ஹோலிகிராஸ் பழைய குட்செட் ரோடு சாக்சீடு தொண்டு நிறுவனம் அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்ததாக கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவரின் சட்டைப்பையில், திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்ததற்கான புறநோயாளி சீட்டில் சமயபுரம் இந்திரா காலனி கேசவன் மகன் குருநாதன் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்பேரில் போலீசார் சமயபுரம் பகுதியில் விசாரணை நடத்தியபோது, இறந்துகிடந்த நபர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே இவரைப்பற்றிய தகவல் தெரிந்தவர்கள் கோட்டை போலீஸ் நிலைய செல்போன் எண் 94981 00628, இன்ஸ்பெக்டர் தயாளன் 94981 56633, சப்-இன்ஸ்பெக்டர் சட்டநாதன் 94981 56879 ஆகிய எண்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News