உள்ளூர் செய்திகள்

கார் மீது லாரி மோதி டிரைவர் சாவு

Published On 2023-08-26 13:45 IST   |   Update On 2023-08-26 13:45:00 IST
  • திருச்சி அருகே இன்று கார் மீது லாரி மோதி டிரைவர் சாவு
  • ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

திருச்சி,

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 47) கார் டிரைவர். இவர் கரூர் திருச்சி சாலையில் காரை ஓட்டிச் சென்றார்.இந்த நிலையில் அந்த வழியாக சென்ற லாரி, கார் மீது லாரி மோதியது. இதில் காரின் முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கிய கார் டிரைவர் சுதாகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News