உள்ளூர் செய்திகள்

திருச்சி பொன்மலை பட்டியில் வரதட்சணையாக கார் கேட்டு இளம் ெபண்ணுக்கு சித்திரவதை

Published On 2023-02-15 07:46 GMT   |   Update On 2023-02-15 07:48 GMT
  • வரதட்சணையாக கார் கேட்டு இளம் ெபண்ணை சித்திரவதை செய்தனர்
  • கணவர் உட்பட 6 பேர் மீது வழக்கு

திருச்சி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி புது ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி பானு ரேகா (வயது 30). இவருக்கும் செந்திலுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது ரேகாவுக்கு 70 சவரன் தங்க நகைகள் மற்றும் வீட்டுக்கான இதர பொருட்கள் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.இந்நிலையில் கணவர் வீட்டார் கடந்த ஓராண்டாக கார் கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது தாய் வீட்டுக்குச் சென்ற பாணு ரேகா பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகா வழக்கு பதிவு செய்து பானு ரேகாவின் கணவர் செந்தில் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Tags:    

Similar News