உள்ளூர் செய்திகள்

வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து

Published On 2023-02-14 08:04 GMT   |   Update On 2023-02-14 08:04 GMT
செல்போனை திருடியதாக கூறி கத்தியால் குத்திய 2 பேர் கைது

திருச்சி, 

திருச்சி மாவட்டம் தொட் டியம் அருகே உள்ள அழகு நாச்சியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த–வர் சுரேஷ் (வயது 27). இவர் தனது நண்பர் சத்ய–ராஜ் என்பவருடன் கோட்டை–மேடு சன்னாசியப்பன் கோவில் அருகாமையில் திறந்த வெளியில் உட் கார்ந்து மது குடித்துக் கொண்டிருந்ததாக கூறப்ப–டுகிறது.இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள கோட்டைமேடு நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த ரகுபதி (24), சுகுமார் (23), சரவணன் (40) ஆகிய 3 பேரும் தனியாக அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.இதற்கிடையே ரகுபதி–யின் செல்போன் தொலைந் துள்ளது. உடனே எதிரே மது குடித்துக் கொண்டிருந்த சுரேசிடம் சென்று என்னு–டைய செல்போனை நீ தான் திருடினாய், அந்த செல்போனை கொடுத்து விடு என ரகுபதி கூறி–னார்.ஆனால் சுரேஷ் நான் திருடவில்லை என்று கூறி மறுத்துள்ளார். அதைத் தொடர்ந்து இரு தரப்பின–ருக்கும் இடையே மோதல் ஏற் பட்டது. ஆத்திரமடைந்த ரகு–பதி தரப்பினர் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த சூரி கத்தியால் அவரை குத்தி விட்டு தப்பி ஓடினர்.இதில் சுரேசுக்கு கழுத்து, கன்னம், உதடு ஆகி ய இடங்களில் பலத்த கத்திக்குத்து விழுந்தது. இதைப்பார்த்த அங்கு வந்த நண்பர் சத்யராஜ் அவரை மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக தொட்டியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரகுபதி, சுகுமார் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். தலைமறைவாகி விட்ட சரவணனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News