உள்ளூர் செய்திகள்
பெண் பழ வியாபாரியிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு
- எ.புதூர் போலீசார் வழக்கு பதிந்து 2 வட மாநில பெண்கள் கைது செய்துள்ளனர்
- ஆயுதப்படை அருகே நடந்த துணிகரம்
திருச்சி
திருச்சி கிராப்பட்டி போலீஸ் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி சுமதி ( வயது 42). இவர் திருச்சி- மதுரை சாலை டி.எஸ்.பி. பட்டாலியன் அருகில் பழக்கடை நடத்தி வருகிறார். சுமதி பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இரண்டு வட மாநில பெண்கள் கத்தி முனையில் இவரிடம் பணத்தை பறித்து சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் எடமடைபட்டிபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி உமா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் பணம் பறித்ததாக ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் மினே பகுதியைச் சேர்ந்த ரத்தன் மனைவி சாயிரி, கோபால் லால் மனைவி பூரி ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.