உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

Published On 2022-12-19 15:06 IST   |   Update On 2022-12-19 15:06:00 IST
  • மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தார்
  • மோட்டார் ஸ்விட்ச்சை போடும் பொழுது

திருச்சி,

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கோவாத்குடி கிராமம் ஹரிசன தெருவைச் சேர்ந்தவர் அங்கமுத்து. இவரது மகன் நந்தகுமார் (வயது 24) . இவர் கோவத்தகுடி கிராமத்தில் உள்ள கோரக்கர் சித்தர் பீடத்தில் உள்ள பூஜை அறையில் மின் மோட்டார் ஸ்விட்ச்சை போடும் பொழுது அதிலிருந்து மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிருந்த மண்ணச்சநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News