உள்ளூர் செய்திகள்

திருச்சி காவிரிஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு - தாய்க்கு திதி கொடுக்க வந்த இடத்தில் பரிதாபம்

Published On 2022-09-30 15:10 IST   |   Update On 2022-09-30 15:10:00 IST
  • திருச்சி தில்லை நகர் 5-வது குறுக்கு தெரு காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (வயது 26)
  • ராஜேஸ்வரன் தாய்க்கு திதி கொடுக்க ஆற்றுக்கு வந்த போது நீரில் மூழ்கி பலியானார்.

திருச்சி,

திருச்சி தில்லை நகர் 5-வது குறுக்கு தெரு காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மகன் ராஜேஸ்வரன் (வயது 26). வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டடுள்ள ராஜேஷ்வரன், தன்னுடைய தாய்க்கு திதி கொடுப்பதற்காக உறவினர்களுடன் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு சென்றார்.

அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து சண்முகவேல் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆற்றில் மூழ்கி இறந்த ராஜேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து தி விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News