ஸ்ரீரங்கம் பூ வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: அ.தி.மு.க. நிர்வாகி அதிரடி கைது
- ஸ்ரீரங்கம் பூ வியாபாரிக்கு அரிவாள் வெட்டு
- அ.தி.மு.க. நிர்வாகி அதிரடி கைது
திருச்சி,
திருச்சி திருவானைக்காவல் சிங்கபெருமாள் கோவில்தெருவை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 37). இவர் ஸ்ரீரங்கம் மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை மாணிக்கம்பிள்ளை தெரு அருகே கதிர்வேல் சென்றபோது, பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அவரை சிலர் வழிமறித்து அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு கையில் வெட்டு விழுந்து காயமடைந்தார். பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த கதிர்வேலை அப்பகுதி மக்கள் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தற்போது ரங்கராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் திருவானைக்காவல் பகுதி அ.தி.மு.க. துணை செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.சுரேஷ், செல்வகுமார் ஆகிய இருவரை தேடி வருகின்றனர். கொலை முயற்சி வழக்கில் அ.தி.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.