உள்ளூர் செய்திகள்

திருச்சி அருகே நடுரோட்டில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து

Published On 2022-06-23 09:58 GMT   |   Update On 2022-06-23 09:58 GMT
  • திருச்சி அருகே இன்று அதிகாலை பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றிச்சென்ற லோடு ஆட்டோ நடு ரோட்டில் கவிழ்ந்தது
  • அந்த வழியாக வந்தவர்கள் கவிழ்ந்து கிடந்த ஆட்டோவிற்குள் சிக்கியிருந்த சேக் முகமதுவை பத்திரமாக மீட்டனர்

திருச்சி:

புதுக்கோட்டை மாவட்டத்தைச் ேசர்ந்தவர் சேக்முகமது (வயது 35). இவர் இன்று அதிகாலை திருச்சியில் இருந்து லோடு ஆட்டோவில் பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றிக்கொண்டு பஞ்சப்பூர் வழியாக புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென பஞ்சப்பூர் போலீஸ் சோதனை சாவடி அருகே வந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென லோடு ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

பின்னர் சாலையில் தாறுமாறாக ஓடிய ஆட்டோ நடுரோட்டில் கவிழ்ந்தது. அப்போது அந்த வழியாக வந்தவர்கள் கவிழ்ந்து கிடந்த ஆட்டோவிற்குள் சிக்கியிருந்த சேக் முகமதுவை பத்திரமாக மீட்டனர்.

அதிஷ்டவசமாக லோடு ஆட்டோ டிரைவர் சேக்முகமதுவிற்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை.

மேலும் இதுகுறித்து திருச்சி தெற்கு புலனாய்வு போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரனை நடத்தினார்கள்.

Tags:    

Similar News