திருச்சி அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
- திருச்சி அரசு பள்ளி மாணவிவை பாராட்டினர்
- சமூக அக்கறையில் சாதனை
திருச்சி:
உலகம் முழுவதும் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
அந்த வகையில் கின்னஸ் சாதனையாளரும், திருச்சி கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவியுமான சாய்னா ஜெட்லி பெண்கள் பாதுகாப்பு எண் 181 மற்றும் அவசர அழைப்பு எண் 100, தாய் மொழியை போற்றும் வகையில் முதல் எழுத்தான அ. மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு எண் 1098 இவற்றை ஒரு மணி நேரம் கட்டை விரலால் தம் வைத்து 7 மீட்டர் அளவில் உருவாக்கி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
இவரை 17-வது வார்டு கவுன்சிலர் எஸ்.கே.சாதிக் பாட்சா நேரில் பாராட்டினார். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களும் இவரது சமூக அக்கறையை பெரிதும் பாராட்டினார். இவரது இந்த சாதனை ஜெட்லி புக் ஆப் ரெகார்ட்ஸ் நேஷனல் ரெக்கார்ட்ஸ் ஆசிய பசிபிக் சாதனை ஆகிய புத்தகங்களில் இடம் பெற உள்ளது.
இவர் ஏற்கனவே 20 முறை உலக சாதனைகள் செய்தவர் பெற்றோர் பிரபல கராத்தே மாஸ்டர் கின்னஸ் சாதனையாளர் டாக்டர் டிராகன் ஜெட்லி சசிகலா ஆவார்.