உள்ளூர் செய்திகள்

தொட்டியம் கொசவம்பட்டியில் தீவிர தூய்மை பணி

Published On 2022-07-25 10:20 GMT   |   Update On 2022-07-25 10:20 GMT
  • கொசவம்பட்டியில் சிறப்பு தீவிர தூய்மைப் பணி பேரூராட்சி தலைவர் சரண்யாபிரபு தலைமையில் நடந்தது.
  • தூய்மைப் பணி குறித்தும் மற்றும் மக்கும் குப்பை மக்காத குப்பையை தரம் பிரித்தல் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் விநியோகம் நடைபெற்றது.

திருச்சி :

திருச்சி மாவட்டம் தொட்டியம் பேரூராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு கொசவம்பட்டியில் சிறப்பு தீவிர தூய்மைப் பணி பேரூராட்சி தலைவர் சரண்யாபிரபு தலைமையில் நடந்தது.

பேரூராட்சி செயலாளர்கள் கரு.சண்முகம் இளநிலை உதவியாளர்கள் கண்ணன், கதிரேசன், 3-வார்டு கவுன்சிலர் செந்தமிழ்ச்செல்வன் 9-வார்டு பி.ரவி முன்னாள் வார்டு கவுன்சிலர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

இதில் கோவில் வளாகம் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி சுற்றியுள்ள பகுதிகள், பள்ளி வளாகம், அனைத்து வீதிகளும் தூய்மை பணி கழிவுநீர் வடிகால் சுத்தம் செய்தல், தூய்மைப் பணி குறித்தும் மற்றும் மக்கும் குப்பை மக்காத குப்பையை தரம் பிரித்தல் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் விநியோகம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் துப்புரவு மேற்பார்வையாளர் ரமேஷ் வரி தண்டலர்கள் செல்வராஜ், கோகிலா, டிரைவர்சுகுமார், எலக்ட்ரீசியன் சின்னத்தம்பி, கணினி பணியாளர் கார்த்தி, மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பேரூராட்சிப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News