உள்ளூர் செய்திகள்

அய்யம்பாளையம் அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

Published On 2022-08-30 09:06 GMT   |   Update On 2022-08-30 09:06 GMT
  • அய்யம்பாளையம் அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
  • 118 மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

திருச்சி:

முசிறி அடுத்த அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். முசிறி ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. கதிரவன் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு 118 மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பெருமாள், உதவி தலைமை ஆசிரியை பவானி, உடற்கல்வி ஆசிரியர் வசந்த், தி.மு.க. புறநகர் மாவட்ட அவைத் தலைவர் அம்பிகாவதி, மனச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் வளர்மதி சின்ராஜ், மாவட்ட இளைஞரணி கார்த்திக், முசிறி ஒன்றிய துணைச் செயலாளர் மூர்த்தி ,ஒன்றிய கவுன்சிலர் ஜானகி அண்ணாதுரை, தொண்டரணி சரவணன், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளம்சேட்சென்னி, வட்டார ஒருங்கிணைப்பாளர் நடேசன் ஆசிரியர் பயிற்றுநர் பர்வின், மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் மணிகண்டன் மற்றும் மாணவ, மாணவிகள் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News