உள்ளூர் செய்திகள்
- ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபரை கைது செய்தனர்
திருச்சி:
திருச்சி எடமலைப்பட்டி புதூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சகாயகுமார் (வயது 44). ஆட்டோ டிரைவர். இவர் எடமலைப்பட்டி புதூர் அரசு காலனி சந்திப்பு ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கத்தி முனையில் இவரிடம் பணத்தைப் பறித்து விட்டு சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி எடமலைப்பட்டி புதூர் கொல்லாங்குளம் பாரதி நகரை சேர்ந்த இப்ராஹிம்(வயது 39) என்பவரை கைது செய்தார். அவரிடமிருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. கைதான இப்ராஹிம் மீது உறையூர், கே.கே. நகர், கோட்டை, எடமலைப்பட்டி புதூர், கண்டோன்மெண்ட், அரியமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, கீரனூர் ஆகிய காவல் நிலையங்களில் 11 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது