அழுகிய நிலையில் வீட்டுக்குள் பிணம்
- திருச்சியில் அழுகிய நிலையில் வீட்டுக்குள் எலக்ட்ரீசியன் பிணம் கிடந்தது
- பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி,
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை பாண்டியன் தெரு பகுதியைச் சேர்ந்தவன் சகாயராஜ் (வயது 40 )எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் 3 தினங்களுக்கு முன்பு அவரது மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் அவரதுபூட்டிய வீட்டுக்குள் இருந்து இன்று துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்த போது சகாயராஜ் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின பேரில் பொன்மலை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டுக்குள் சகாயராஜ் தூக்கில் பிணமாக தூங்கி கொண்டிருந்தார். உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.மனைவி கோபித்துச் சென்ற அன்றைய தினமே அவர் தூக்கில் தொங்கி இருக்கலாம் எனக் கூறப்பட்டது.பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.