- காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி நடைபெற்றது
திருச்சி:
அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், ராகுல் காந்தி அலுவலகத்தை சேதப்படுத்தியவர்களை கைது செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட அலுவலகமான அருணாசலம் மன்றம் முன்பு மாவட்டத் தலைவர் ஜவஹர் முன்னிலையில் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன்,மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்யராஜ், மாநில பொதுச் செயலாளர்கள் வக்கீல் இளங்கோ, வக்கீல் சரவணன், கவுன்சிலர்கள் சுஜாதா. சோபியா விமலா ராணி, பேட்ரிக் ராஜ்குமார், ராஜா டேனியல் ராய், சரவண சுந்தர், ஜி கே முரளி ராஜலிங்கம், கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், ரவி ஜெரால்டு, ராஜ்மோகன், ஆனந்தராஜ் ,
மாவட்ட துணைத்தலைவர்கள் கிரேசி ஜார்ஜ், மகேந்திரன்,முரளி சார்லஸ் மெய்யநாதன்,சிக்கல் சண்முகம் , மாவட்ட பொதுச் செயலாளர்கள் சிவா,உறையூர் எத்திராஜூ அண்ணாசிலை விக்டர் மணிவேல், அரியமங்கலம் சக்திவேல், தாரநல்லூர் மாணிக்கவாசகம், உய்யகொண்டான் திருமலை பாஸ்கர், மலைக்கோட்டை சேகர் ஹெலன், அமிர்தவள்ளி, டேவிட், பட்டேல், எஸ்சி எஸ்டி பிரிவு தலைவி ஜோதி பிரியங்கா
பஞ்சாயத்து ராஜ் பிரிவு தலைவர் அண்ணாதுரை பட்டதாரி அணி பிரிவு தலைவர் ரியாஸ், மீனவர் காங்கிரஸ் தனபால், மகளிர் அணி ஷீலா செல்ஸ், கோகிலா, வசந்தி, விஜயலட்சுமி, ரோஸி, வக்கீல் வனஜா. ஜெனித்தா மேரி,ரேணுகா, மகா கனக ஜோதி சந்திரா, ராதா தீபா ஸ்டெல்லா, மலர் வெங்கடேஷ், பிரியங்கா பட்டேல், அல்லூர் எழிலரசன்,அன்பில் ராஜேந்திரன். சரோஜாதேவி, ரகமத்துல்லா, நல்லுசாமி, மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.