உள்ளூர் செய்திகள்

சிவில் சப்ளை கார்ப்பரேஷன் எம்ப்ளாயீஸ் யூனியன் பொதுக்குழு கூட்டம்

Published On 2022-06-20 09:18 GMT   |   Update On 2022-06-20 09:18 GMT
  • தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் எம்ப்ளாயீஸ் யூனியன் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
  • தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி:

திருச்சி சத்திரம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தலைவர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட கவுன்சில் செயலாளர் ஜோசப் நெல்சன், ஓம் பிரகாஷ், மண்டல பொருளாளர் ஆபிரகாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தி.மு.க.மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மேயர் அன்பழகன், பேச்சிமுத்து, குணசேகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து,

மண்டலத்தில் உள்ள காலிப்பணியிடங்களை திருச்சி மாவட்டத்தில் உள்ள பணியாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும். தலைமை அலுவலக உத்தரவு படி தளவாட சாமான்கள் இயக்கம் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். கழிப்பிட வசதி இல்லாத குடோன் களுக்கு கழிப்பிட வசதி செய்து தரவேண்டும். 2012 பேனல் கொள்முதல் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு கூட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News