உள்ளூர் செய்திகள்

திருமண மண்டபம் உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு

Published On 2022-09-13 15:08 IST   |   Update On 2022-09-13 15:08:00 IST
  • திருமணமண்டபம் உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதியபட்டது
  • விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

திருச்சி செப் 13-

திருச்சி துறையூர் பெரிய சிட்டி தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது40). நேற்று முன்தினம் பெரிய செட்டி தெரு பகுதிக்கு எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற காதுகுத்து திருவிழா கொண்டாட்டத்தின் போது வெடி வைத்துள்ளனர்.

இதில் திருமண மண்டபத்திற்கு அருகே உள்ள வினோத்குமாரின் மகன் ரோகன் வைபவ் (வயது11) காயமடைந்தார். இதையடுத்து ரோகன் திருச்சி அரசு மருத்து வமனையில் அ னுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வினோத்குமார் கொடுத்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் தனியார் திருமண மண்டப உரிமையாளர் மற்றும் காது குத்து திருவிழா நடத்திய நபர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதே போல் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கீழக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் (வயது49). இவர் நேற்று திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்ல திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரது கடவு சீட்டை சோதனை செய்த இமிகிரேஷன் அதிகாரிகள் அதில் காணாமல் போன நான்கு பக்கங்கள் குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அவரை திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்ததால் விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News