உள்ளூர் செய்திகள்

வீட்டிற்குள் பட்டாசு வீச்சு-பொருட்கள் சேதம்

Published On 2022-10-26 09:49 GMT   |   Update On 2022-10-26 09:49 GMT
  • திருச்சியில் மர்ம நபர்கள் வீட்டிற்குள் பட்டாசை வீசி எறிந்ததால் பாத்திரங்கள் மற்றும் துணிகள் சேதம் அடைந்தன
  • பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

திருச்சி:

திருச்சி பெரிய மிளகு பாறை புது தெரு வசித்து வருபவர் பொன்னர் (43). நேற்று முன் தினம் இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர் இவருடைய வீட்டிற்குள் வெடியை கொளுத்தி போட்டுள்ளார்.

இதில் வீட்டிற்குள் இருந்த துணி மற்றும் பாத்திரங்கள் அனைத்தும் தீயில் கருகியது. சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீயில் கருகிய பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.10 என்று கூறப்படுகிறது.

இது குறித்து பொன்னர் செசன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி இ.பி. ரோடு கமலா நேரு நகர் பகுதியில் வசித்து வருபவர் சந்தானம் (வயது 54). இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று ஜெகதீஸ்வரன், சந்துரு, சக்திவேல் ஆகிய மூன்று வாலிபர்கள் வெடி வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை சற்று தள்ளி சென்று வெடிக்குமாறு சந்தானம் அறிவுறுத்தியுள்ளார்.

இதில் மூன்று பேரும் சேர்ந்து சந்தானத்தை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு பீர் பாட்டிலால் அவரை தாக்கி குத்தியுள்ளனர்.

இது குறித்து கோட்டை காவல் நிலையத்தில் சந்தானம் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெகதீஸ்வரன் (19) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News