உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது

Published On 2022-08-06 10:13 GMT   |   Update On 2022-08-06 10:13 GMT
  • கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

திருச்சி:

முசிறி பழைய ஆர்டிஓ அலுவலகம் பகுதியில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தொட்டியம் திருநாராயணபுரம் அரிசனத் தெரு வை சேர்ந்த ராமசாமி மகன் ராகுல் (வயது23) ,தொட்டியம் வடுகர் தெருவை சார்ந்த ஜெயபிரகாஷ் மகன் கோகுல்நாத் (19) , அரசலூர் பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் வசந்த (23) ஆகிய மூன்று பேரும் சந்தேகத்திற்கிடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கையில் வைத்திருந்த கட்டைப் பையை போலீசார் வாங்கி சோதனை செய்தனர். கட்டைப் பையில் 3 கிலோ கஞ்சா இருப்பதை கண்ட போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News