உள்ளூர் செய்திகள்

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவிலில் - முதல் சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம்

Published On 2023-11-22 05:52 GMT   |   Update On 2023-11-22 05:52 GMT
  • மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி மாற்றுரை வரதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை முதல் சோமவா ரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடை பெற்றது.
  • அர்ச்சகர்கள் கணபதி ஹோ மம் செய்து சங்குகளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து, வேத மந்திரம் ஓதி பூஜைகள் செய்தனர்.

மண்ணச்சநல்லூர்

மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி மாற்றுரை வரதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை முதல் சோமவா ரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடை பெற்றது.

முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள வெளிநடராஜர் மண்ட பத்தில் 108 வலம்புரி சங்கு கள் லிங்க வடிவம் மற்றும் வட்டப்பாதையில் சுற்றி வைக்கப்பட்டது. அதன் மை யத்தில் வலம்புரி சங்கு வைக்கப்ப ட்டு அனைத்து சங்குகளிலும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து எடுத்து வ ரப்பட்ட புனிதநீர் நிரப்ப ப்பட்டு பின்னர் அந்த சங்கு களில் மாவிலைகள் மற்றும் பூக்கள் வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அர்ச்சகர்கள் கணபதி ஹோ மம் செய்து சங்குகளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து, வேத மந்திரம் ஓதி பூஜைகள் செய்தனர். இதில் ஏரா ளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சங்கில் உள்ள புனித நீர் முதல் பிரகாரம் வழியாக அம்மன் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு அம்ம னுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதே போல் மீதமுள்ள சங்கில் உள்ள புனிதநீர் எடுத்து செல்லப்பட்டு மாற்று ரைவரதீஸ்வரருக்கு சங்கா பிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகாதீபாராதனை நடை பெற்றது. பின் அர்த்த ஜாம பூஜை நடைபெற்றது.

Tags:    

Similar News