உள்ளூர் செய்திகள்

சிறப்பிடம் பெற்ற மாணவனுக்கு வெற்றிக்கோப்பை வழங்கப்பட்ட காட்சி.

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2022-07-26 09:10 GMT   |   Update On 2022-07-26 09:10 GMT
  • சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் 3 மாணவர்கள் தமிழ் மொழியில்100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
  • சிறந்த வெற்றியை பெற்றதற்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பள்ளியின் செயலாளர் முகமது பண்ணையார் வாழ்த்தினார்.

தென்காசி:

செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்கள் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் முதல் ஆண்டிலேயே வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்கள் முகமது பாஹிம் 91.6 சதவீதம் பெற்று முதலிடமும், முகமது உசேன் 83.4 சதவீதம் பெற்று 2-ம் இடமும், முகமது சபீர் 82.2 சதவீதம் பெற்று 3-ம் இடம் பிடித்தனர்.

3 மாணவர்கள் தமிழ் மொழியில்100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பள்ளி சராசரி மதிப்பெண் 70 சதவீதம் ஆகும். பொதுத்தேர்வை எதிர்கொண்ட முதல் ஆண்டிலேயே சிறந்த வெற்றியை பெற்றதற்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பள்ளியின் செயலாளர் முகமது பண்ணையார், பள்ளியின் தாளாளர் ஷேக் செய்யது அலி, முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டது. இந்த தேர்வில் மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

Tags:    

Similar News