உள்ளூர் செய்திகள்

திருக்குறுங்குடியில் வனத்துறை சார்பில் படிப்பகம் திறப்பு விழா நடந்த போது எடுத்தபடம்.

சூழல் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் கிராம மக்களுக்கு நாட்டுப்புற கலைகள் குறித்த பயிற்சி-புலிகள் காப்பக அதிகாரி தகவல்

Published On 2022-09-21 09:20 GMT   |   Update On 2022-09-21 09:20 GMT
  • திருக்குறுங்குடி நம்பிதோப்பில் களக்காடு புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு கோட்டம், திருக்குறுங்குடி சூழல் சரகம் சார்பில் படிப்பகம், சூழல் இளையோர் விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடந்தது.
  • களக்காடு புலிகள் காப்பக சூழல்மேம்பாட்டு அதிகாரியும், துணை வன பாதுகாவலருமான அன்பு தலைமை தாங்கி படிப்பகம் மற்றும் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார்

களக்காடு:

திருக்குறுங்குடி நம்பிதோப்பில் களக்காடு புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு கோட்டம், திருக்குறுங்குடி சூழல் சரகம் சார்பில் படிப்பகம், சூழல் இளையோர் விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடந்தது.

களக்காடு புலிகள் காப்பக சூழல்மேம்பாட்டு அதிகாரியும், துணை வன பாதுகாவலருமான அன்பு தலைமை தாங்கி படிப்பகம் மற்றும் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார். அதனைதொடர்ந்து தையல் அழகு கலை பயிற்சி பெற்ற 30 பெண்களுக்கு சான்றிதழ்களையும், கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற லெவிஞ்சி புரம், நம்பி தலைவன் பட்டயம் அணிகளுக்கு பரிசுகளும், கோப்பை களும், வீரர்களுக்கு பதக்கங்களும் வழங்கினார்.

அதனைதொடர்ந்து அவர் பேசியதாவது:-

சூழல் கோட்டத்தில் 653 கிராம வனக்குழுக்களும், 16 ஆயிரம் உறுப்பினர்களும், 20 கோடி நிதியும் உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் படிப்பது துறை சார்ந்த படிப்பு களாகத்தான் இருக்கும், அதை முழுமையாக்குவது புத்தகங்கள்தான். அதற்காகத்தான் கிராமங்கள் தோறும் படிப்பகத்தை அமைத்து வருகிறோம்.

வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சூழல் இளையோர் விளையாட்டு குழு வீரர்கள் இந்திய அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் களக்காடு புலிகள் காப்பக லோகோவுடன் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்படும். மறந்து போன நாட்டுப்புற கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக நெல்லை தனியார் கல்லூரி நாட்டார் வழக்காடு குழு சார்பில், சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு நாட்டுப்புற பாட்டு, நாட்டு புற விளையாட்டு, நாட்டுபுற கலைகள் குறித்து பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் நெல்லை அரும்புகள் அறக்கட்டளை இயக்குனர் ராஜ மதிவாணன், திருக்குறுங்குடி பேரூராட்சி தலைவர் இசக்கித்தாய், சூழல் திட்ட வனசரகர்கள் திருக்குறுங்குடி யோகேஸ்வரன், களக்காடு பிரபாகரன், அம்பை முகுந்தன், வனவர்கள் அப்துல் ரஹ்மான், சிவக்குமார், பேரூராட்சி கவுன்சிலர் சுகன் யா, கிராம வனக் குழு தலை வர்கள் கவிதா, அய்யம்மாள், பால சுப்பிர மணியன், பொ ன்னி வளவன். முன்னாள் வனக்குழு தலைவர் சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News