உள்ளூர் செய்திகள்

சாலையில் வாகன நெரிசலை சரிசெய்த துணை சேர்மன்

Published On 2022-09-10 09:49 GMT   |   Update On 2022-09-10 09:49 GMT
  • முகூர்த்த தினம் என்பதால் அதிக அளவில் திருமணங்கள் நடைபெற்றது.
  • வழக்கத்தை விட வாகன நெரிசல் சற்று அதிகரித்து காணப்பட்டது.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா சுற்றுவட்டாரத்தில் முகூர்த்த தினம் என்பதால் அதிக அளவில் திருமணங்கள் நடைபெற்றது.

இதனால் காலை அதிக அளவு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்றதால் வழக்கத்தை விட வாகன நெரிசல் சற்று அதிகரித்து காணப்பட்டது.

இதில் திருமணத்திற்கு சென்று கொண்டிருந்த தி.மு.க. மாவட்ட ஊராட்சி குழு துணைச்சேர்மன் ஷேக் ரஷீத் மற்றும் ஒன்றிய துணை செயலாளர் ராமசந்திரன் மற்றும் நிர்வாகிகள் வாகன நெரிசலில் சிக்கினர்.

இந்த நிலையில் வாகன நெரிசல் சரியாகாத காரணத்தால் சேர்மன் காரை விட்டு கீழே இறங்கி நடந்து சென்று வாகன நெரிசலை சீர்படுத்தினார்.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

Tags:    

Similar News