உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

கொடைக்கானலில் ஆபத்தை உணராமல் அருவிகளில் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்

Published On 2023-05-22 13:00 IST   |   Update On 2023-05-22 13:00:00 IST
  • எழில் கொஞ்சும் வனப்பகுதியின் நடுவே அருவி ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் ஆர்வ மிகுதியில் செல்பி, புகைப்படம் எடுக்க அத்துமீறி செல்கின்றனர்.
  • ஆர்வ மிகுதியால் தடுப்பு இல்லாத அருவியின் மேலே ஏறிச்செல்கின்றனர். இதனால் வழுக்கி விழும் அபாயம் உள்ளது.

கொடைக்கானல்:

கோடை சீசனையொட்டி கொடைக்கானலில் ஏராள மான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

கோடை விழா மலர் கண்காட்சி வருகிற 26ந் தேதி தொடங்குகிறது. எனவே அப்போது சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கொடை க்கானலில் இதமான சீதோசனம் நிலவி வருகிறது. அவ்வப்போது கன மழையும் பெய்து வருகிறது.

இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார்புரம் அருவி, லிரில் அருவி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியின் நடுவே அருவி ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் ஆர்வ மிகுதியில் செல்பி, புகைப்படம் எடுக்க அத்துமீறி செல்கின்றனர்.

குறிப்பாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வட்டக்கானல் அருவி, புலிச்சோலை அருவிகளில் பயணிகள் ஆர்வ மிகுதியால் தடுப்பு இல்லாத அருவியின் மேலே ஏறிச்செல்கின்றனர். இதனால் வழுக்கி விழும் அபாயம் உள்ளது.

மேலே செல்ல வனத்து றையினர் அனுமதி அளி க்காதபோதும் சிலர் ஆப த்தை உணராமல் செல்கின்ற னர். எனவே வனத்துறை யினர் இவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுருளி அருவியில் மரம் முறிந்து விழுந்து சென்னை மாணவி பலியானார். எனவே மேலும் ஒரு அசம்பாவித சம்பவம் நிகழும் முன்னர் வனத்து றையினர் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News