உள்ளூர் செய்திகள்
கொடைக்கானலில் சி.எஸ்.கே வெற்றியை கொண்டாடிய சுற்றுலா பயணிகள்
- ஐ.பி.எல் இறுதிபோட்டி யில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.
- கேப்டன்தோனி கோப்பையை கையில் வைத்திருப்பது போல் கேக் ஆர்டர் செய்து அதனை பைன் பாரஸ்ட் மரங்களுக்கு இடையே வெட்டி ஒருக்கொருவர் பகிர்ந்தளித்து கொண்டாடினர்.
கொடைக்கானல்:
ஐ.பி.எல் இறுதிபோட்டி யில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றிபெற்றது. இதனை தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கொடை க்கானல் பைன்பாரஸ்ட் பகுதியில் சி.எஸ்.கே வெற்றியை கொண்டாட சுற்றுலா பயணிகள் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து கேப்டன்தோனி கோப்பையை கையில் வைத்திருப்பது போல் கேக் ஆர்டர் செய்து அதனை பைன் பாரஸ்ட் மரங்களுக்கு இடையே வெட்டி ஒருக்கொரு வர் பகிர்ந்த ளித்து கொண்டாடினர்.
இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.