உள்ளூர் செய்திகள்

தொடர்மழையால் வெள்ளிநீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை படத்தில் காணலாம்.

தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு அருவிகளில் நீராடி சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Published On 2022-12-28 10:32 IST   |   Update On 2022-12-28 10:32:00 IST
  • சுற்றுலா பயணிகள் அதிகமாக கண்டு ரசிக்கும் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளின் நீரோட்டத்தை கண்டு ரசிக்க குவிந்தனர்.
  • கூடுதல் போலீசாரை நியமித்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

கொடைக்கானல்:

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் கொடைக்கானல் நகர் மற்றும் மலைக்கிராம பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக சுற்றுலாப் பணிகள் அதிகமான சுற்றுலா தலங்களை ரசிக்க முடியாமல் அறைகளில் முடங்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் நேற்று மதிய வேலைக்கு பின் மழை சற்று குறைந்தது. இதனால் அனைத்து சுற்றுலா தளங்களிலும் பயணிகளின் கூட்டம் அலை மோதியது. கொடைக்கானல் தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.

மேலும் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா பயணிகள் அதிகமாக கண்டு ரசிக்கும் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளின் நீரோட்டத்தை கண்டு ரசிக்க குவிந்தனர்.

இதன் காரணமாக அனைத்து அருவிப்பகுதிகளிலும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. பாம்பார், வட்டக்கானல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் நீராடி மகிழ்ந்தனர். பயணிகளின் வருகை அதிகரிப்பால் கொடைக்கானலின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கும் நிலையில் கூடுதல் போலீசாரை நியமித்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News