உள்ளூர் செய்திகள்
வேடசந்தூர் பகுதியில் நாளை மின் தடை
நாளை (20ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
வேடசந்தூர்:
வேடசந்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (20ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேடசந்தூர், லகுவணம்பட்டி, நாகம்பட்டி, தம்மணம்பட்டி, முதலியார்பட்டி, நாகக்கோணனூர், வெள்ளனம்பட்டி, காளனம்பட்டி, தட்டாரபட்டி, ஸ்ரீராமபுரம், பூத்தாம்பட்டி, புதுப்பட்டி, தெத்துப்பட்டி, சேனான்கோட்டை, சுள்ளெரும்பு, நவாமரத்துப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் ஆனந்த குமார் தெரிவித்துள்ளார்.