உள்ளூர் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் நாளை 5 இடங்களில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார் - அப்துல் வகாப் எம்.எல்.ஏ. -ஆவுடையப்பன் அறிக்கை

Published On 2022-11-11 09:37 GMT   |   Update On 2022-11-11 09:37 GMT
  • தி.மு.க.வின் வாக்குச்சாவடி முகவர்களுடன் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
  • தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி முகவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

நெல்லை:

தி.மு.க.வின் வாக்குச்சாவடி முகவர்க–ளுடன் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்ச–ருமான மு.க.ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) காணொலி காட்சி வாயிலாக கலந்துரை–யாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதி–களிலும் உள்ள வாக்குச்சாவடி முகவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

இதற்கான ஏற்பாடு–களை அந்தந்த மாவட்ட செய–லாளர்கள் செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் இந்த கூட்டம் 5 இடங்களில் நடைபெறுகிறது. இது தொடர்பாக நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.–ஸ்டாலின் வாக்குச்சவாடி முகவர்களுடன் தொகுதி வாரியாக காணொலி மூலம் கலந்துரையாடுகிறார்.

நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு பேட்டை வசந்தம் மகாலிலும், பாளை சட்டமன்ற தொகுதிக்கு வண்ணார்பேட்டை அப்னா பார்க் ஓட்டலிலும் நாளை மாலை 5 மணிக்கு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள், கட்சி நிர்வாகிகள் மாலை 4 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமரும் வகையில் முன்னதாக தயாராக வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போல நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப–தாவது:-

முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நெல்லை கிழக்கு மாவட்டத்தில் உள்ள அம்பை, நாங்கு–நேரி, ராதாபுரம் சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடி முகவர்களுடன் கலந்துரை–யாடல் நிகழ்ச்சி நாளை மாலை 5 மணிக்கு 3 இடங்களில் நடைபெற உள்ளது.

அம்பை தொகுதிக்கு கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி திருமண மண்டபத்திலும், நாங்குநேரி தொகுதிக்கு நாங்கு–நேரி சுப்புலெட்சுமி திருமண–மண்டபத்திலும், ராதாபுரம் தொகுதிக்கு வள்ளியூர் எம்.எஸ்.மகால் திருமண மண்டபத்திலும் நடைபெற உள்ளது.

எனவே அந்தந்த தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் உள்ள வாக்குச்சாவடி முகவர்கள் கட்டாயமாக கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் அவரவர் தொகுதிக்குட்பட்ட இடங்களில் மட்டும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News