உள்ளூர் செய்திகள்
கொத்தடிமை தொழிலாளர் குறித்த புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்- தென்காசி கலெக்டர் தகவல்
- கொத்தடிமை தொழிலாளர் குறித்த புகார்களை தெரிவிக்க 155214 என்ற எண் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
- குழந்தை,கொத்தடிமை தொழிலாளர் குறித்த புகார்களை ஏற்கனவே உள்ள 1800 4252 650 எண்ணிலும் தெரிவிக்கலாம்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர் குறித்த புகார்களை தெரிவிக்க பொதுமக்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் பொருட்டு பி.எஸ்.என்.எல். மூல ம் 155214 என்ற எண் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர் குறித்த புகார்களை தெரிவிக்க ஏற்கனவே உள்ள 1800 4252 650 என்ற எண்ணிலும் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள 155214 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.