உள்ளூர் செய்திகள்

குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு

Published On 2024-01-11 08:42 GMT   |   Update On 2024-01-11 08:56 GMT
  • கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ந்தேதி தேர்வு நடைபெற்றது.
  • 55 ஆயிரம் பேர் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தனர்.

டி.என்.பி.எஸ்.சி. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ந்தேதி குரூப் 2 முதன்மை தேர்வை நடத்தியது. ஆனால், முடிவு வெளியிடப்படாமல் இருந்தது. இதனால் முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இதனால் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஒருநாள் முன்னதாக இன்று குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 10 1/2 மாதங்கள் கழித்து முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு நடத்தப்பட்டபோது 5486 இடங்களுக்கு 55 ஆயிரம் பேர் தேர்வு எழுந்தியிருந்தனர். தற்போது காலிபணியிடங்கள் 6157 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டு மே மாதம் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல் நிலை தேர்வு நடைபெற்றது.

Tags:    

Similar News