உள்ளூர் செய்திகள்
- விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
போளூர்:
போளூரில் நேற்று சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு வான்முகில் மெட்ரிக் பள்ளி மாணவிகள் பொதுமக்கள் இடையே பெண்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலம் போளூர் ஈஸ்வரன் கோவில் தெருவில் தொடங்கி சிந்தாரப்பேட்டை தெரு வழியாக சென்று தாசில்தார் அலுவலகத்தை அடைந்தனர்.
நிகழ்ச்சியில் 75-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.