உள்ளூர் செய்திகள்

பாம்பு கடித்து பெண் சாவு

Published On 2022-09-22 09:17 GMT   |   Update On 2022-09-22 09:17 GMT
  • தண்ணீர் பாய்ச்ச நிலத்திற்கு சென்ற போது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

போளூர்:

போளூர் அருகே எடப்பிறை கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் விவசாயி. இவரது மனைவி நதியா (வயது 34). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நதியா கடந்த 18-ந்தேதி நிலத்தில் நெல் நடுவதற்கு, நிலம் உழுவதற்கு தண்ணீர் பாய்ச்ச இரவு 9 மணிக்கு நிலத்தில் வரப்பு மீது நடந்து சென்றார்.

அப்போது அவரது இடதுகாலில் பாம்பு கடித்தது. உடனடியாக அவரை போளூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நதியா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போளூர் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News