உள்ளூர் செய்திகள்

டிராக்டர் மோதி பெண் பலி

Published On 2023-02-12 09:18 GMT   |   Update On 2023-02-12 09:18 GMT
  • உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

வாணாபுரம்:

தண்டராம்பட்டு அருகே உள்ள தரடாபட்டு பகுதி யைச் சேர்ந்தவர் சேகர். இவ ரது மனைவி செல்வி (வயது 40). இவரும் உறவினர்களான குமார் மற்றும் மாரியம்மாள் ஆகிய 3 பேரும் வரகூரில் உள்ள உறவினரின் விசேஷத்திற்காக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை குமார் ஓட்டினார்.

வாணாபுரத்தில் இருந்து தண்டராம்பட்டு நோக்கி கூடலூர் அருகே வந்தபோது கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் செல்விபடுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக் காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News