உள்ளூர் செய்திகள்
சாலை விபத்தில் வேன் டிரைவர் பலி
- சம்பவ இடத்திலேயே இறந்தார்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கலசபாக்கம் நடுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது47) வேன் டிரைவர். தனது மோட்டார் சைக்கிளில் வேலூருக்கு நேற்று காலை சென்றார்.
அவரது பின்னால் திருவண்ணாமலை கோர்ட்டில் அமினா வேலை செய்யும் சொரகுளத்தூர் கண்ணதாசன் அமர்ந்து சென்றார். வண்ணாங்குளம் சுடுகாடு பகுதியில் எதிரே பஸ்ஸூக்கு வழிவிட ரமேஷ் தனது மோட்டார் சைக்கிளை ரோட்டோரமாக சென்றார்.
பின்னர் சாலையில் பயணம் செய்ய முயன்ற போது எதிர் பாராத விதமாக கீழே விழுந்து இருவரும் படுகாயமடைந்தனர்.இதில் அடிபட்ட ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். கண்ணதாசன் காயத்துடன் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த விபத்து தொடர்பாக கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.