உள்ளூர் செய்திகள்

நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த உரிமையாளர் கைது

Published On 2023-04-03 14:34 IST   |   Update On 2023-04-03 14:34:00 IST
  • ரூ.11.43 லட்சம் அபேஸ்
  • போலீசார் விசாரணை

செய்யாறு:

செய்யாறு தாலுகா அனக் காவூர் கிராமத்தைச் சேர்ந்த வர் அருள்தேவன் (வயது 42).

இவர் செய்யாறில் இயங்கி வந்த தனியார் நிதி நிறுவனத் தின் கவர்ச்சிகரமான திட்டத் தினால் கவரப்பட்டு ஏஜெண்டாக பணிபுரிந்து பொதுமக்க ளிடம் பணத்தை வசூல் செய்து தனியார் நிறுவனத் தில் செலுத்தி உள்ளார்.

அதன்படி 44 பேரிடம் பணம் வசூல் செய்து ரூ.11 லட்சத்து 43 ஆயிரம் செலுத் தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனியார் நிதி நிறு வன உரிமையாளர்கள் திடீரென நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அருள்தேவன் தனி யார் நிதி நிறுவன உரிமையாளர்களை தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அந்த புகாரில் தனியார் நிதி நிறுவன உரிமையாளர்கள் திருவத்திபுரம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (38), செய்யாறு டவுன் வாணி தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் (35) ஆகியோர் தன்னை மோசடி செய்து ஏமாற்றி உள்ளனர் என்றும், ரூ.11 லட்சத்து 43 ஆயிரத்தை மீட்டு தரும்படி தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் இன்ஸ்பெக் டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னார். இதையடுத்து தனியார் நிதி நிறுவன உரிமையாளர் சீனிவாசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு உரிமையாளர் ராஜ் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News