உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவி தற்கொலை

Published On 2023-01-08 08:51 GMT   |   Update On 2023-01-08 08:51 GMT
  • மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்
  • போலீசார் விசாரணை

தண்டராம்பட்டு:

தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகே சே.ஆண்டப் பட்டு கிராமத்தில் உள்ள ரைஸ்மில் தெருவில் வசித்து வருப வர் சக்திவேல் (வயது 45), கூலித்தொழிலாளி.

இவரது 2-வது மகள் சந்தியா தானிப்பாடி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி சந்தியா மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை யிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த தானிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News