உள்ளூர் செய்திகள்

ஆன்மீக பொதுஅறிவு போட்டியில் பள்ளி மாணவி சாதனை

Published On 2023-04-12 14:20 IST   |   Update On 2023-04-12 14:20:00 IST
  • 3-ம் இடம் பிடித்தார்
  • பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டு

போளூர்:

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஸ்ரீ ராமஜெயம் குளோபல் சீனியர் செகண்டரி சிபிஎஸ்இ பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி வி.கார்த்திகா ஈரோடு எக்ஸெல் பதிப்பகம் சார்பாக நடத்தப்பட்ட மாநில அளவிலான ராமாயணம், மகாபாரதம் ஆன்மீகம் பொது அறிவு போட்டியில் கலந்து கொண்டு 3-ம் இடத்தை பெற்றுள்ளார்.

பரிசு பெற்ற கார்த்திகாவை பள்ளியின் சேர்மன் ஏழுமலை மற்றும் துணை சேர்மன் ஸ்ரீதர் மற்றும் முதல்வர், ஆசிரியர் ஆகியோர் பாரட்டினர்.

Tags:    

Similar News