மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- 3 கால யாக பூஜைகள் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு, அடுத்த புதுப்பட்டி, கிராமத்தில் கூழ் மாரியம்மன், விநாயகர், முருகர், சிவன், நவகிரக, கோவில் புதிதாக கட்டப்பட்டு பஞ்ச வர்ணம் பூசி இதன்மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
கோவிலின் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு 108 கலசம் வைத்து ஆனந்த் ஷர்மா, அய்யர் குழுவினர் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசத்தை வைத்து, 3 கால யாக பூஜைகள் செய்தனர்.
பின்னர் புனித நீர் கலசத்தை மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வந்து கோவில் விமான கோபுரத்தின் மீது உள்ள கலசத்தில் நீரை ஊற்றினார்கள். பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர். பின்னர் சூரிய பகவானுக்கு கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள், செய்து இருந்தனர்.