உள்ளூர் செய்திகள்
செய்யாறு அருகே காழியூரில் ஆண் பிணம் மீட்பு
- யார்? என அடையாளம் தெரியவில்லை
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள காழியூர் கிராமத்தில் அத்தி செல்லும் சாலையில் சிறிய பாலம் உள்ளது.
இந்த பாலத்திற்கு அடியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது.
தகவல் அறிந்து காழியூரில் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் சம்பவ இடம் சென்று பார்த்தார்.
இதுகுறித்து செய்யாறு போலீசில் புகார் செய்தார்.
செய்யாறு போலீசார் உடலை மீட்டு இறந்தவர் என்ன காரணத்துக்காக இறந்து கிடந்தார்.
எந்த ஊரை சேர்ந்தவர் காணாமல் போனவர் பட்டியலில் இறந்த நபர் இருக்கின்றாரா என்ற பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.