உள்ளூர் செய்திகள்

திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியிடம் உல்லாசம்

Published On 2023-05-10 14:52 IST   |   Update On 2023-05-10 14:52:00 IST
  • கராத்தே மாஸ்டர் குண்டர் சட்டத்தில் கைது
  • வேலூர் ஜெயிலில் அடைப்பு

தண்டராம்பட்டு,

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி. அதே பகுதியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரவீன்குமார் (வயது 23). கராத்தே மாஸ்டர். இவர் பிளஸ் 2 மாணவியை காதலிப்பதாக கூறப்படுகிறது.

குண்டர் சட்டத்தில் கைது

திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அடிக்கடி உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் தண் டராம்பட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

விசாரணையில் பிரவீன்குமார் மீது ஏற்கனவே இதே போன்று தானிப்பாடி போலீசில் ஒரு வழக்கு இருப்பது தெரியவந்தது. இதனால் பிரவீன்குமார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News