உள்ளூர் செய்திகள்

பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.

செங்கம் புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மறியல்

Published On 2022-11-30 09:35 GMT   |   Update On 2022-11-30 09:35 GMT
  • போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதாக புகார்
  • போலீசார் பேச்சுவார்த்தை

செங்கம்:

செங்கம் டவுன் பகுதியில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் செங்கத்தை அடுத்த மண்மலை பகுதியில் இருந்து குயிலம் கூட்ரோடு வரை புறவழிச்சாலை திட்டத்திற்கு விவசாயம் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் திருவண்ணாமலை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் செங்கம் போலீசார் சம் பவ இடத்துக்கு வந்து மறிய லில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து விவசாயிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News