உள்ளூர் செய்திகள்

உழவர் தியாகிகள் தினம்

Published On 2022-07-06 09:34 GMT   |   Update On 2022-07-06 09:34 GMT
  • முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
  • விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வல்லம் கிராமத்தில் இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் உழவர் தியாகிகள் தினம் முன்னிட்டு விவசாயிகள் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மாநிலத் தலைவர் வேட்டவலம் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகளின் போராட்டத்திற்காக உயிர் நீத்த உழவர் தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் டி.கே.பி.மணி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன், குணசீலன் ஒன்றிய செயலாளர் அர்ஜுனன் லோகேஸ்வரன் பச்சையப்பன் தங்கராஜ் செல்வராஜ் மகேந்திரன் அரங்கநாதன் துரை திருமூலன் வந்தவாசி நகர செயலாளர் பாஷா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News