உள்ளூர் செய்திகள்

மின் வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

Published On 2022-09-26 09:55 GMT   |   Update On 2022-09-26 09:55 GMT
  • மின் தடையை சரி செய்யாததால் அவதி
  • அதிகாரிகள் தீர்வு காண பொதுமக்கள் வலியுறுத்தல்

போளூர்:

போளூர் மின்சார வாரியத்தில் மின்வாரிய ஊர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனால் போளூர் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 1½ நேரமாக மின்சாரம் தடைப்பட்டு சரி செய்வதற்கு யாரும் ஆட்கள் இல்லை.

தமிழ்நாடு முழுவதும் மின்சார வாரிய ஊழியர்கள் பஞ்சப்ப படி உயர்வினை உடனடியாக வழங்க கோரி இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போளூர் மின்சார வாரியத்தில் வேலை செய்கிறார்கள். அவர்கள் இன்று வேலை நேரத்தில் சுமார் 80 சதவீதம் பேர் ஈடுபட்டுள்ளதால் போளூர் முழுவதும் தடைபட்டுள்ள மின்சாரத்தை சரி செய்வதற்கு ஆட்கள் இல்லை அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News