உள்ளூர் செய்திகள்

தி.மு.க. பாசறை பயிற்சி கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

தி.மு.க. பாசறை பயிற்சி கூட்டம்

Published On 2022-11-18 15:20 IST   |   Update On 2022-11-18 15:20:00 IST
  • ஆரணியில் நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ஆரணி:

ஆரணி அருகே இ.பி.நகர் தனியார் மண்டபத்தில் தி.மு.க இளைஞர் அணி பயிற்சி பாசறை கூட்டம் இளைஞர் அணி அமைப்பாளர் எவரெஸ்ட் நரேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் தரணிவேந்தன், எம்.எல்.ஏ. எழிலன், எழுத்தாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். இதில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு தொடுதிரை மூலம் பயிற்சி வழங்கப்பட்டது.

இதில் நகர மன்ற தலைவர் ஏசி மணி ஒன்றிய செயலாளர்கள் மோகன், துரை மாமது, அன்பழகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஞ்சித், முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தம், நகர அவைத் தலைவர் அக்பர், மாவட்ட பிரதிநிதி பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News